ஜூனியர் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் 5 விக்கெட் வீழ்த்தினார்

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
ஜூனியர் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் 5 விக்கெட் வீழ்த்தினார்
Published on

மும்பை:

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (ஜூனியர்) கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் ரெயில்வே அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தாத மும்பை வீரரான தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 2-வது இன்னிங்சில் 11 ஓவர்கள் பந்து வீசி 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com