ஜோலார்பேட்டையில் ஆன்-லைனில் கார் பரிசு விழுந்ததாக வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு

ஜோலார்பேட்டையில் ஆன்-லைனில் கார் பரிசு விழுந்ததாக வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்-லைனில் பணம் பறிப்பு
ஆன்-லைனில் பணம் பறிப்பு
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த மாதம் ஆன்-லைனில் பொருள் வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் உதயகுமார் போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளது. அதற்கு ரூ.3 லட்சம் கட்டினால் போதும் என தெரிவித்தித்தனர். முன் பணமாக ரூ.1 லட்சம் தரவேண்டும் எனவும். காருக்கு உண்டான ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை உதயகுமாரின் வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர்.

இதனால் உதயகுமார் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்தி உள்ளார். அதன்பின் சர்வீஸ் சார்ஜ் ரூ.25 ஆயிரம் அனுப்ப கூறினர்.

அதையும் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கார் வராததால் அவர்கள் தகவல் அனுப்பிய செல்போனில் தொடர்பு கொண்ட போது போன் ஸ்விட்ச் ஆக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து உதயகுமார் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com