விம்பிள்டன்: 33 வருடத்திற்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை கோன்டா

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 33 வருடத்திற்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை கோன்டா பெற்றுள்ளார்.
விம்பிள்டன்: 33 வருடத்திற்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை கோன்டா
Published on

ஒரு போட்டியில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா, பிரான்ஸ் நாட்டின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார். 6-ம் நிலை வீராங்கனையான கோன்டாவிற்கு கார்சியா கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7)- 6(3) என கோன்டா முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டில் கார்சியா 6-4 என கார்சியா வெற்றி பெற்றார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் கோன்டா சிறப்பாக விளையாடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 1984-ம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 33 வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெயரை கோன்டா பெற்றுள்ளார். கோன்டா அரையிறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com