ஜெயங்கொண்டத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை

அரியலூர் அருகே நகைக்கடை அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் ஜெயங்கொண்டம் கடை வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி தேவி. இருவரும் காலையில் அங்குள்ள பள்ளி மைதானத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். அதுபோல் இன்று காலை இருவரும் வாக்கிங் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றனர்.

பின்னர் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.3லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும்.

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. கென்னடி, இன்ஸ்பெக்டர்  வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சரவணன் மற்றும் அவரது மனைவி வாக்கிங் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com