மூதாட்டியிடம் நகை பறிப்பு - போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டத்தில் முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு - போலீசார் விசாரணை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி கொல்லம்பாளையம் சோலையப்பன் வீதியில் வசித்து வரும் லிங்கப்பன் மனைவி கண்ணம்மாள் (வயது 78) வீட்டு வாசலில் நின்றிருந்த போது முகவரி கேட்பது போல் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது இது பற்றி அவர் புகார் கொடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியோர்களுக்கு உதவும் வகையில் சீனியர் சிட்டிசன் மொபைல் செயலியை ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் அறிவித்திருந்தார்.

இது குறித்து அறிந்த கண்ணம்மாள் சீனியர் சிட்டிசன் மொபைல் செயலி மூலம் தன்னுடைய நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com