

முன்னதாக இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா, புதிய குழு விரைவில் அமைக்கப்படும் என்றார். ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு, மேலும் 6 மாதம் நீட்டிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜெயசூர்யாவின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
“இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த குழு தொடர வேண்டும் என்று விரும்புகிறது. இந்த குழுவில் நீங்கள் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது’’ என்று ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.