ஊழல் தடுப்புப் பிரிவில் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு- ஐசிசி அதிரடி

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சனத் ஜெயசூர்யா மீது ஐசிசி, ஊழல் தடுப்புப் பிரிவில் குற்றம் சுமத்தியுள்ளது. #Jayasuriya
ஊழல் தடுப்புப் பிரிவில் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு- ஐசிசி அதிரடி
Published on

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தேசிய அணியின் தேர்வுக்குழு சேர்மனாக இருந்தார். 2013 முதல் 2015 வரையும், அதன்பின் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார்.

இந்த காலக்கட்டத்தில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் சனத் ஜெயசூர்யா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு ஆஜராகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com