

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த 17-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றினால் அது சட்ட விரோதமாகும். மேலும், சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து பண பரிவர்த்தனையும், போயஸ் கார்டன் வீட்டில் தான் நடந்துள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.