

புரி ஜகன்னாதர் கோவிலில் ஜனவரி 1 முதல் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகத்தினர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புரியில் பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இதற்கிடையே, சுற்றுலா பயணிகளாக வரும் சிலர் தங்களிடம் இருக்கும் மொபைல் போன் கேமராவில் கோவிலை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என கோவில் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், புரி ஜகன்னாதர் கோவிலில் ஜனவரி 1 முதல் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.