சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோஅமைப் பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

சிவகங்கை:

அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.

புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக் குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com