ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
கோல் அடித்த வீரரை பாராட்டும் சக வீரர்கள்
கோல் அடித்த வீரரை பாராட்டும் சக வீரர்கள்
Published on

ஐதராபாத்:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. ஜாம்ஷெட்புர் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 39-வது நிமிடத்தில் ஐதராபாத் அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என ஐதராபாத் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் இறுதியில் 93-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்தது.

இறுதியில், ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com