கிருஷ்ணகிரி அணையின் புதிய ஷட்டரில் இரும்பு தளவாடங்கள் இணைக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு மற்றும் ஷட்டரில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
கிருஷ்ணகிரி அணையின் புதிய ஷட்டரில் இரும்பு தளவாடங்கள் இணைக்கும் பணி தீவிரம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரூ.30 லட்சம் மதிப்பில், 12 அடி உயரத்திற்கு தற்காலிக மதகு அமைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய மதகு அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக மதகு அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது. இதனிடையே ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இதில் முதல்கட்டமாக, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தகடுகள், ரோலர்கள், இணைப்பு சங்கிலி, பக்கவாட்டு சுவர் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந்தேதி நிறைவு பெற்றது.

இதையடுத்து புதிய மதகு மற்றும் ஷட்டரில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகளில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிக வேக காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் வெல்டிங் பணிகளில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இருப்பினும் கியாஸ் வெல்டிங் பணிகள் 4 முதல் 5 நாட்களில் முழுமையாக நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com