

“ஒவ்வொரு அணியும் உள்ளூரிலும் முடிந்த வரை அதிக ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும். அந்த வகையில் நாங்கள் இந்த மைதானத்தை எங்களது கோட்டையாக மாற்ற முயற்சிக்கிறோம்’ என்று ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறியிருக்கிறார்.
புனே அணி 11 ஆட்டங்களில் 7-ல் வெற்றி கண்டு 14 புள்ளிகளை சேகரித்துள்ளது. தொடக்கத்தில் தடுமாறினாலும் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்துள்ள புனே அணி கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி பக்கமே சென்றதில்லை. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட முடியும்.