

அதன்பின் அந்த அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. அடிக்கடி வீரர்களையும், பயிற்சியாளரையும் மாற்றி மாற்றி பார்க்கிறது. ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. கட்நத சீசனில் அஸ்வினை கேப்டனாகவும், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ச்-ஐ பயிற்சியாளராகவும் நியமித்தது. அத்துடன் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் விளையாடினார்கள். சேவாக் ஆலோசகராக உள்ளார்.
முதலில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி 2-வது கட்டத்தில் அதிக அளவில் வெற்றிகளை குவிக்க இயலவில்லை. இதனால் முதல் நான்கு இடங்களை பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
அடுத்த வாரம் மைக் ஹெசன் இந்தியா வருகிறார். அப்போது இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். 2019 உலகக்கோப்பைக்குப் பின் வரை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டிய மைக் ஹெசன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.