

சேஸ் வீசிய 47-வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 31 ரன் எடுக்கப்பட்டது. ஒரு ஓவரில் இந்தியா எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக (1999-ம் ஆண்டு) தெண்டுல்கர்- அஜய் ஜடேஜா ஜோடி ஒரு ஓவரில் 28 ரன் எடுத்து இருந்தது. அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 32 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் சேர்த்தார்.