கப்தில், சாப்மேன் அதிரடி: இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து

புவனேஷ்வர் குமார், அஸ்வின் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் வீழ்த்த தீபக் சாஹர் 42 ரன்களும், முகமது சிராஜ் 39 ரன்களும் வாரி வழங்கினர்.
மார்ட்டின் கப்தில்
மார்ட்டின் கப்தில்
Published on

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகம் ஆனார்.

நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் புவி வீசிய முதல் ஓவரில் க்ளீன் போல்டானார். அடுத்து மார்ட்டின் கப்தில் உடன் மார்க் சாம்மேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சாப்மேன் 50 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 42 பந்தில 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் விளாசியது. இதனால் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் அடித்துள்ளது. 

புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், அஸ்வின் 4 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முகமது சிராஜ் 39 ரன்களும், தீபக் சாஹர் 42 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com