

இந்தியாவின் ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது சந்திரனின் மண் மாதிரிகளையும் அதன் தன்மைகளையும் போட்டோ எடுத்து அனுப்பியது.
அதன் அடிப்படையில் பரிசோதித்த போது தண்ணீருடன் சம்பந்தப்பட்ட ஹைட்ரோசில் மூலக் கூறுகள் அதில் இருப்பது தெரியவந்தது. ஹைட்ரோசில் மூலக்கூறு ஹைட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜனை உள்ளடக்கியது. எனவே சந்திரனில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என 2009-ம் ஆண்டு அறிவியல் இதழில் கட்டுரை வெளியிட்டது.
அதன் அடிப்படையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திராயன்-1 விண்கலம் எடுத்து அனுப்பிய சந்திரன் மண்ணியல் வரை படத்தின் அடிப்படையில் புதிய ஆய்வு மேற்கொண்டனர்.