அமெரிக்க நிறுவனத்தில் மோசடி - இந்திய வம்சாவளி அதிகாரி கைது

அமெரிக்க நிறுவனத்தில் இணையம் வாயிலாக 9.3 பில்லியன் டாலர் மோசடி செய்தது தொடர்பாக இந்திய வம்சாவளி அதிகாரி கைது செய்யப்பட்டார். #CiscoEmployee #Fraud
அமெரிக்க நிறுவனத்தில் மோசடி - இந்திய வம்சாவளி அதிகாரி கைது
Published on

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சிஸ்கோ. இந்த நிறுவனத்தில் சர்வதேச வினியோக பிரிவில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரித்விராஜ் பிகா (வயது 50). இந்திய வம்சாவளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மத்தியில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் பணியில் இருந்த காலத்தில் பிரித்விராஜ் பிகா, இணையம் வாயிலாக 9.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.65 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 200) வரை மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com