

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுவதால் இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் நேற்று திடீரென அறிவித்தது.
இதனால் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் லாகூர் வரை வந்தது. அந்த ரெயிலில் இந்தியாவுக்கு பயணம் செய்த 16 பாகிஸ்தான் பயணிகள் இருந்தனர். இருந்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படாது என பாகிஸ்தான் ரெயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.