மத்திய மந்திரி சு‌ஷ்மாவுடன் ஹமீத் நிகல் அன்சாரி சந்திப்பு

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய ஹமீத் நிகல் அன்சாரி தனது குடும்பத்தினருடன் மத்திய மந்திரி சு‌ஷ்மாவை சந்தித்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். #HamidNehalAnsari #SushmaSwaraj
மத்திய மந்திரி சு‌ஷ்மாவுடன் ஹமீத் நிகல் அன்சாரி சந்திப்பு
Published on

புதுடெல்லி :

பாகிஸ்தானில் உள்ள தனது சமூக வலைத்தள தோழியை 2012-ம் ஆண்டில் சந்திக்க சென்றிருந்த மும்பை சாப்ட்வேர் என்ஜினீயர் ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33), சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு சென்றதாக கைது செய்யப்பட்டார். தண்டனை முடிந்து நேற்றுமுன்தினம் அவர் நாடு திரும்பினார்.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி சு‌ஷ்மா சுவராஜை அவர் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு உணர்வுமயமாக இருந்தது.

சு‌ஷ்மா சுவராஜ், அன்சாரியை தாய் போல தழுவி, தட்டிக் கொடுத்தார். அப்போது அவர், ‘‘என்னை மன்னித்து விடுங்கள். நன்றி அம்மா’’ என்று கூறினார்.

தனது பாகிஸ்தான் அனுபவங்களை சு‌ஷ்மா சுவராஜிடம் பகிர்ந்து கொண்டபோது அவரது கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் உருண்டோடின.

அப்போது சு‌ஷ்மா சுவராஜ், ‘‘உங்களிடம் நிறைய துணிச்சல் இருக்கிறது. நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது’’ என குறிப்பிட்டார்.

அன்சாரி விவகாரத்தில் சு‌ஷ்மா சுவராஜ் தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்காக அன்சாரியின் தாயார் பாஜியாவும் சு‌ஷ்மா சுவராஜூக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். #HamidNehalAnsari #SushmaSwaraj

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com