மாட்டு இறைச்சிக்கு தடை விதிப்பதா?: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ வாங்கவோ தடை விதித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

மத்திய அரசு இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ வாங்கவோ தடை விதித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

மாட்டு இறைச்சி தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தனி மனித உணவு உரிமையில் தலையிடக்கூடாது. மாட்டை வைத்து நடத்தும் மதவாத அரசியலை அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com