

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல் இன்றுடன் தனது சிறப்பான பயணத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றது.
நாட்டின் சுமார் 7 ஆயிரத்தி 500 கிலோ மீட்டர் கடற்கரையை பாதுகாக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பயன்பாட்டுக்காக 18 கப்பல்கள் வரை கடலோரக் காவல் படையில் உள்ளன. கடந்த 1984-ம் ஆண்டு தயாராகி 1988-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பலானது சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான சேவையை வழங்கியுள்ளது.