

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.
அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பொல்லார்டு பூரனுக்கு அதரவாக இருந்தார். இதனால் தடைக்கான போட்டிகள் முடிந்த அடுத்த போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிரான தொடரில் களம் இறக்கப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 29 ரன்களும், 47 பந்தில் 75 ரன்களும், 64 பந்தில் 89 ரன்களும் விளாசினார்.
இந்நிலையில் பொல்லார்டு இல்லை என்றால் தனது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும் என்று நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.