பெங்களூரு மைதானத்தில் பாரம்பரிய முறையில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கன் வீரர்கள்

பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் நிலையில், இன்று ஆப்கன் வீரர்கள் பாரம்பரிய முறையில் ரம்ஜான் கொண்டாடினர். #INDvAFG #EidMubarak
பெங்களூரு மைதானத்தில் பாரம்பரிய முறையில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கன் வீரர்கள்
Published on

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


இந்நிலையில், ரம்ஜான் தினமான இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி உட்பட அனைத்து வீரர்களும் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து ரம்ஜானை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாட தயாராகினர். ஆப்கன் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #INDvAFG  #EidMubarak

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com