பெண்கள் உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் இந்தியா நாளை பலப்பரீட்சை

பெண்கள் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் நாளைய போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பெண்கள் உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் இந்தியா நாளை பலப்பரீட்சை
Published on

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இத்தொடர் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் கடந்த 29-ந்தேதி வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. இதில் இந்திய வீராங்கனை மந்தனா 108 பந்தில் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்தியா தான் சந்தித்த முதல் இரண்டு போட்டியிலும் வெற்றியை ருசித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com