இந்திய டி20 அணிக்கு ஐந்தாவது பந்து வீச்சாளர் தேவை: புவனேஸ்வர் குமார்

இந்திய டி20 கிரிக்கெட் அணி ஐந்தாவது பந்து வீச்சாளரை தவற விடக்கூடாது என்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய டி20 அணிக்கு ஐந்தாவது பந்து வீச்சாளர் தேவை: புவனேஸ்வர் குமார்
Published on

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 2-வது போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை.

இதனால் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாட வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘இந்திய அணி தோல்வியடைந்ததற்காக பந்து வீச்சார்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். எதிரணி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் சிறப்பாக செயல்பட்டோம். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் மிகவும் சிறியது. முதல் போட்டியில் தோல்வியடைந்தால், அதன்பின் 1-1 என சமநிலைப் பெற்று, தொடரை தீர்மானிக்கும் போட்டியில் விளையாட முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com