

மழை குறுக்கிட்டதால் மறுநாள்(நேற்று) ஆட்டம் ரிசர்வ் செய்யப்பட்டது. இதனையடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று களம் இறங்கியது.
கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இது குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
அணி எப்போதும் ரோகித், விராட் கோலி ஆகியோரையே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள்தான் சிறப்பான தொடக்கம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சொல்லக் கூடாது. அணியில் அனைவருக்குமே பொறுப்பு உண்டு.
டோனியும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார்கள். 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் என்பது சிறப்பான ஒன்றுதான். எப்போதுமே டோனி வந்து ஆட்டத்தை இறுதியில் முடித்துக் கொடுப்பார் என நினைப்பது சரியானதே அல்ல.
நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சனின் தலைமை மிகச் சிறப்பாக இருந்ததை நான் உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.