

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்களான டி வில்லியர்ஸ், ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்ற முன்னணி வீரர்கள் ஓய்வுக்குப் பிறகு அந்த அணி தத்தளித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என படுமோசமாக இழந்தது. இதனால் ஹசிம் அம்லா ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்புகிறார் என செய்தி உலா வந்தனர்.
ஆனால் ஹசிம் அம்லா இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அம்லா கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்க தேசிய அணிக்கு நான் மீண்டும் திரும்பவதற்கான வழியே இல்லை. 15 வருடங்கள் அணிக்காக விளையாடிய பின்னர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு முடிவை அறிவித்தேன்’’ என்றார்.