மரவள்ளிகிழங்கு விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் ஜவ்வரிசி விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மரவள்ளிகிழங்கு
மரவள்ளிகிழங்கு
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல், வேட்டமங்கலம், ஒரம் புபாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். 

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கீரனூர், நாமகிரிபேட்டை, ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயார் செய்தும் கிழங்கு மாவு மில்களுக்கு புரோக்கர்கள் மூலம் டன் கணக்கில் வாங்கி அனுப்பி வைக்கின்றனர். 

மரவள்ளிக்கிழங்குகளை (டார்ச்) பாய்ண்ட் அடிப்படையில் வாங்குகின்றனர். கிழங்கு களில் எத்தனை பாய்ண்ட் டார்ச் சத்து இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல் ஜவ்வரிசி விலை உயரும் போது மரவள்ளி கிழங்கு விலை உயர்வும், வீழ்ச்சி அடையும் போது விலை குறைத்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜவ்வரிசி விலையை சேகோசர்வ் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

கடந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர். ஜிப்சம் தயாரிப் போர் ஒரு டன் ரூ.11,500 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.10,500-க்கும் அதேபோல் ஜிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.12,500-க்கும் வாங்கிச்சென்றனர். ஜவ்வரிசி விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com