எஸ்.பி.கே. கட்டுமான அதிபர் வீடு-நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #SPK
அலுவலகம் செயல்படும் எஸ்.பி.கே.வணிக வளாகம்.
அலுவலகம் செயல்படும் எஸ்.பி.கே.வணிக வளாகம்.
Published on

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது60). அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்.

இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

இவருக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளன.

இன்று காலை 6.30 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அதிபர் செய்யாத்துரையின் வீடுகள்.

அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், செந்தில் வேலன் மற்றும் போலீசார் செய்யாத்துரை வீடு, அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com