மின்பற்றாக்குறையை சரிசெய்ய 15 நாளில் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி- அமைச்சர் தங்கமணி தகவல்

வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Minister #thangamani
மின்பற்றாக்குறையை சரிசெய்ய 15 நாளில் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி- அமைச்சர் தங்கமணி தகவல்
Published on

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாளில் குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பில் இருந்து நமக்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்உற்பத்தியில் நமக்கு 3 மாதமாக மின்சாரம் தரவில்லை. ஆனாலும் நீர்மின்நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின்உற்பத்தியை வைத்து நிலைமையை சமாளித்தோம்.

காற்றாலை மூலம் அதிகமாக மின்உற்பத்தி கிடைத்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்உற்பத்தி கணிசமாக குறைந்தது.

மேலும் வடசென்னையில் 2 அனல் மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது 2 நாளில் சரி செய்யப்பட்டுவிடும்.

வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

எனவே இப்போது மின் வெட்டு இல்லை. இதுதான் உண்மை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com