புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 4-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை

தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNRains #IMD
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 4-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை
Published on

அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை நோக்கி வீசும் காற்று காரணமாக தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இன்றும், நாளையும் லேசாக மழை பெய்யும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com