

அதேபோல் இந்திய அணியை உற்சாகப்படுத்த ‘பாரத் ஆர்மி’-யை இந்திய அணி ரசிகர்கள் ஏற்படுத்தினர். ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும்போது ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள் மைதானத்திற்கு பெருமளவில் திரண்டு ஆதரவு அளித்தார்கள். இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதும் பாரத் ஆர்மி ரசிகர்களுடன் இணைந்து உற்சாக ஆட்டம் போட்டனர்.
வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் இந்தியா 9 லீக் ஆட்டங்களில் மோத இருக்கிறது. அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் 11 போட்டிகளில் விளையாடும்.
இந்திய வீரர்களை நேரில் உற்சாகப்படுத்த 22 நாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் ரசிகர்கள் ‘பாரத் ஆர்மி’ அமைப்பில் இணைகிறார்கள்.