பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடிப்பு- காஷ்மீரில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை

காஷ்மீரில் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் போர் விமானங்கள் ராணுவத்தினால் விரட்டியடிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #IndianAirForce #PakistanAFjetsChased
பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடிப்பு- காஷ்மீரில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை
Published on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com