ஒரத்தநாடு அருகே மனைவியை தாக்கி மாங்கல்யத்தை பறித்த கணவர்

குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கி மாங்கல்யத்தை பறித்த கணவரின் செயல் சமயன்குடி காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு அருகே மனைவியை தாக்கி மாங்கல்யத்தை பறித்த கணவர்
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் சமயன் குடிகாட்டை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50). விவசாயி. இவரது மனைவி வளர்மதி பழனிவேல் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறார். வளர்மதியும், அவரது மகனும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் பழனிவேல் நேற்று வளர்மதியுடன் தகராறு செய்து அவரது கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த மாங்கல்யத்தை பறித்ததுடன், அவர் வளர்த்து வந்த 2 ஆடுகளையும் இழுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி வளர்மதி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சமயன்குடி காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com