மனைவியுடன் சேர்ந்து கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கணவர்- போலீசார் விசாரணையில் தகவல்

வேளாங்கண்ணி லாட்ஜில் மனைவியுடன் சேர்ந்து கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கவிதா
கவிதா
Published on

நாகப்பட்டினம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருளானந்தம். இவர் கடந்த 25-ந்தேதி தனது மனைவி சுமதி மற்றும் மற்றொரு பெண்ணுடன் நாகை மாவட்டம் வேளாங் கண்ணிக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில 27-ந் தேதி அருளானந்தம் தங்கியிருந்த அறை நீண்டநேரமாக பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர், வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அறை பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அருளானந்தமும், அவரது மனைவியும் அவர்களுடன் தங்கியிருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கொலையுண்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கொலையுண்ட பெண் தஞ்சையை சேர்ந்த கவிதா (வயது43) என்று தெரியவந்தது.

மேலும் அருளானந்ததுக்கும், கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது கவிதாவுடன் அருளானந்தம் உல்லாசமாக இருந்து வந்தார். இதை பயன்படுத்தி கவிதா, அருளானந்ததிடம் பணம் வாங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அருளானந்தம் விரக்தி அடைந்தார்.

இதையடுத்து கவிதாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பது குறித்தும், பணம் கேட்டு மிரட்டுவது பற்றியும் அருளானந்தம் தனது மனைவி சுமதியிடம் தெரிவித்தார். இதனால் கணவன்- மனைவி இருவரும் கவிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 27-ந் தேதி கவிதாவை நைசாக பேசி அழைத்து கொண்டு கணவன்- மனைவி இருவரும் வேளாங்கண்ணி லாட்ஜிக்கு கூட்டி சென்றனர். அங்கு வைத்து கவிதா, ரூ.1 லட்சம் கொடுத்தால் விலகி சென்று விடுவதாக தெரிவித்தார். இதை கேட்டு கணவன்- மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அருளானந்தம் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர் திடீரென கவிதாவை தாக்கினர்.

                                                                          சுமதி 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கவிதா இறந்ததால் கணவன்- மனைவி இருவரும் அறையை பூட்டி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அருளானந்தம், சுமதி ஆகியோரை போலீசார் தேடினர். இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் இருந்த சுமதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் சுமதியின் கணவர் அருளானந்தத்தை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com