அந்தியூர் அருகே சூறாவளி காற்றுடன் மழை- ரூ.1 கோடி வாழைகள் நாசம்

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் விவசாயிகள் பயிரிப்பட்டிருந்த வாழைகள் சேதம் அடைந்தன.
அந்தியூர் அருகே சூறாவளி காற்றுடன் மழை- ரூ.1 கோடி வாழைகள் நாசம்
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மழை அதிகமாக பெய்யா விட்டாலும் சூறாவளி காற்று சுழட்டி..சுழட்டி அடித்தது.

அந்தியூர் அடுத்த பருவாச்சி காந்தி நகர் மற்றும் குழி தோட்டம் ஆகிய பகுதிகளில் 20 ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிட்டிருந்தனர்.

கதளி, செவ்வாழை, நேந்திரம் போன்ற வாழைகள் பயிரிடப்பட்டு விளைந்து இன்னும் 2 மாதத்தில் அறுவடை ஆக இருந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் விசிய சூறாவளி காற்றில் லட்சுமி, டாக்டர் சிவரஞ்சனி, சுப்பிரமணி உள்பட விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 10 ஆயிரம் வாழைகள் சட..சட..வென முறிந்து விழுந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

சேதம் அடைந்த வாழைகளை பார்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com