

ஹனோலுலு:
சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற தீவான ஹவாயில் நேற்று லேன் என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தற்போது, அலோஹா பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த சூறாவளி வீட்டு கூறைகளை பறக்கவிட்டுள்ளது.
கனமழையால் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது, அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஹவாய் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.