காஞ்சிபுரம் கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அத்தி வரதர் வைபவத்தின் போது, காவல் ஆய்வாளரை திட்டியது குறித்து பதிலளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்ஸ்பெக்டரை கண்டித்த கலெக்டர்.
இன்ஸ்பெக்டரை கண்டித்த கலெக்டர்.
Published on

காஞ்சிபுரம்:

அத்திவரதர் தரிசன விழாவில் வி.ஐ.பி.க்கள் வரிசையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் முறையான ‘பாஸ்’ இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்து இருந்தார். அந்த நேரத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பொன்னையா இதனை கண்டு பிடித்தார்.

இதனால் ஆவேசமான கலெக்டர், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை கண்டித்து கடுமையாக பேசினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் பற்றி விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் காவல் ஆய்வாளரை திட்டியது குறித்து பதிலளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 பொதுமக்கள், காவலர்கள் முன் ஆய்வாளரை திட்டியது மனித உரிமை மீறல் ஆகாதா? என நோட்டீசில் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் கேட்டுள்ளது. அத்துடன் கலெக்டர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com