

ஒகேனக்கல்:
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 5,600 கன அடியாக வந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது.
ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Hogenakkal