ஒகேனக்கல்லில் பயணிகள் குளிக்க தடை நீக்கம்

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டதால் பயணிகள் இன்று ஆனந்தமாக மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் பயணிகள் குளிக்க தடை நீக்கம்
Published on

ஒகேனக்கல்:

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் காலை 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து 10ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டது. 

மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டு இருந்த கயிறு அகற்றப்பட்டு கதவு திறக்கப்பட்டது. பயணிகள் ஆனந்தமாக சென்று மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் இன்று 3-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com