

சென்னை ஐகோர்டில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக ஏராளமான காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளன. கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் இதற்கு காரணம். தற்போது, சின்னதம்பி என்ற யானை ஊருக்குள் புகுந்து, காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறது.