ஈக்வடார் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி

ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். #EcuadorHeavyRains
ஈக்வடார் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி
Published on

குயிட்டோ:

ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமாஎ 20 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கனமழையால் சுமார் 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 7 ஆயிரத்து 700 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#EcuadorHeavyRains

X

Maalai Malar
www.maalaimalar.com