தாளவாடி வனப்பகுதியில் சூறைகாற்றுடன் மழை - 1500 வாழை மரங்கள் நாசம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் 1500 வாழை மரங்கள் நாசமாகின. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் முறிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சூறைக்காற்றில் சாய்ந்து கிடக்கும் வாழைகள்.
சூறைக்காற்றில் சாய்ந்து கிடக்கும் வாழைகள்.
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் சாரல் மழையாக ஆரம்பித்து பின் சூறைகாற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

தாளவாடி இக்களூர் சிக்கள்ளி, தொட்ட காஜனூர், சூசைபுரம், பாரதிபுரம், ஒசூர் ஆகிய பகுதியில் சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது. தாளவாடி அருகே ஓசூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் 3 ஏக்கர் நேந்திரம் வாழை பயிர் செய்து இருந்தார். சூறைகாற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1500 வாழை மரங்களும் முறிந்து நாசம் ஆனது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் முறிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அதேபோல் கும்டாபுரம் அரசு தொடக்கபள்ளி வளாகத்தில் இருந்த கருவேலமரம் முறிந்து தடுப்பு சுவர் மீது விழுந்தது தாளவாடி பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் சூறைக்காற்று வாழைகளை நாசப்படுத்தி வருவதால் தாளவாடி வட்டார விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com