

அதில் ஒன்று தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வோல்கோகிராட் மைதானமும் ஒன்று. இந்த மைதானம் சுமார் 1757 கோடி ரூபாயில் கட்டப்பட்டதாகும். இங்கிலாந்து - ஜப்பான் இடையிலான நாக்அவுட் போட்டி உள்பட 8 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோவில் உள்ள மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. போட்டி முடியும் தருவாயில் கனமழை பெய்தது. அப்போது வோல்கோகிராட்டிலும் கனமழை பெய்தது.
அதுவும் வரலாறு காணாத மழையாக கொட்டி தீர்த்தது. இந்த மைதானம் அருகே ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் மைதானத்தின் வெளிப்புறத்தில் உள்ள கட்டுமானத்தை அரித்துச் சென்றது. இதனால் மைதானத்தின் வெளிப்பபுறத்தில் பல மீட்டர் தொலைவிற்கு பெரிய பள்ளம் விழுந்தது. அதில் சேறு குவிந்துள்ளது.