அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும்- ஐகோர்ட் உத்தரவு

அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் குற்ற வழக்குப்பதிவு செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் ம்துரை கிளை
ஐகோர்ட் ம்துரை கிளை
Published on

மதுரை:

மதுரையை சேர்ந்த தேன்மொழி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இது சட்டப்படி குற்றம். 2வது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால் அவர்கள் மீது துறை நீதியான நடவடிக்கையுடன் குற்ற வழக்கும் பதிவு செய்ய வேண்டும்.  ஓய்வூதியத்திற்காக  மனைவி பெயரை பரிந்துரைக்கும் ஆவணங்களை முறையாக பரிசீலிக்க வேண்டும் எனவும், இதுதொடர்பாக வழிகாடுதல்களை பிறப்பிக்க வேண்டும் என தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com