

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் கடந்த வாரம் ரக்பர்கான் என்பவர் கும்பலால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்களும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், ரக்பர் கானின் மரணத்தில் போலீசாரின் அலட்சியமும் மிக முக்கியமான காரணம் என செய்திகள் வெளியாகின. மாடுகளை காப்பதிலேயே போலீசார் கவனம் செலுத்தியதாகவும், அடிபட்டு உயிருக்கு போராடி வரும் ரக்பர் கானை சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகுதான் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.