அரூர் நகரில் குரங்குகள் அட்டகாசம்- வனப்பகுதியில்விட பொதுமக்கள் கோரிக்கை

அரூர் நகரில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அரூர் நகரில் குரங்குகள் அட்டகாசம்- வனப்பகுதியில்விட பொதுமக்கள் கோரிக்கை
Published on

அரூர்:

அரூர் திருவிகநகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சாபேட்டை மற்றும் பரசுராமன் தெரு ஆகிய பகுதிகளில் குரங்குகள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது.

வீட்டுக்குள் வரும் குரங்குகளை விரட்டினால் கடிக்க வருவதுடன் பொருட்களை தூக்கி கொண்ட சென்று விடுகிறது. குழந்தைகளையும் குரங்குகள் கடித்துள்ளது. மேலும், கேபிள் லைன், தொலைபேசி வயர்களையும் துண்டித்து விடுகிறது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வருகிறது. கதவு திறந்திருக்கும் சமயம் பார்த்து உள்ளே நுழைந்து விடும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும், கடைகளில் மாட்டி வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்களை பாக்கெட்டுடன் அப்படியே தூக்கி சென்று விடுகிறது. இதனால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என வனத்துறையினரை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com