பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணம்: டாக்டர்கள்-நர்சுகளிடம் மீண்டும் இன்ஸ்பெக்டர் விசாரணை

பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் இன்ஸ்பெக்டர் மீண்டும் விசாரணை நடத்தினார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணம்: டாக்டர்கள்-நர்சுகளிடம் மீண்டும் இன்ஸ்பெக்டர் விசாரணை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அரூர் மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் ஏற்கனவே தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார்.

நேற்று மீண்டும் அவர் டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை கேட்டார். மாணவிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளின் பெயர் மற்றும் போடப்பட்ட ஊசியின் வகை ஆகியவை குறித்து கேட்டு அறிந்தார். எந்த நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது? என்பதையும் கேட்டார்.

மேலும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அடங்கிய மருத்துவ சீட்டு மற்றும் பரிசோதனை அறிக்கை விவரங்களை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் இன்ஸ்பெக்டர் லட்சுமி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே மாணவிக்கு அரூரில் சிகிச்சை அளித்த டாக்டரிடமும் இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com