பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்- என்ஜினீயர் கைது

பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள களமருதூர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21). என்ஜினீயர். இவர் அந்த பகுதியில் உள்ள பிளஸ்-1 மாணவி ஒருவரை அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

வீட்டில் இருந்த மாணவி காணாமல் போனதை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் மாணவியை தேடிபார்த்தனர் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அபிசேக்கிடம் இருந்து தப்பி வந்த பிளஸ்-1 மாணவி தனக்கு நடந்த துயர சம்பவத்தை அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக் கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அபிஷேக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com